சைனாடவுனில் முதியவர் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலை வைத்து அடித்து நொறுக்கிய ஆடவர் கைது

smash-beer-bottle-uncles
Shin Min reader

சிங்கப்பூரில், வயதான முதியவர் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலை கொண்டு அடித்து நொறுக்கி காயம் ஏற்படுத்திய 44 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த மே 15 அன்று மாலை 5 மணியளவில் பீப்பிள்ஸ் பார்க் ஃபுட் சென்டரில் (People’s Park Food Centre) நடந்ததாக சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு செக்.. S$6,500 அபராதம் – இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள்!

இந்த சம்பவம் கீழ் தளத்தில் அமைந்துள்ள உணவக அங்காடியில் நடந்துள்ளது என்று அதன் வாசகர் ஒருவர் சமர்ப்பித்த படங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

இதில் பாதிக்கப்பட்ட 60 வயதான நபர், தாக்கியவர் மற்றும் சிலருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக அந்த வாசகர் கூறினார்.

ஆனால், அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆபத்தான ஆயுதம் வைத்து, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 44 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

பயணிகளுக்கு தனிமை, சோதனை இல்லை; சிங்கப்பூருக்கு குவியும் பயணிகள் – விமான நிறுவனங்கள் மகிழ்ச்சி!