தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இந்திய மாநிலங்களில் இருந்து சிங்கப்பூருக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நாடு திரும்ப இந்த சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் மொத்தம் 17 விமானச் சேவைகளை வழங்க உள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 வணிக நிறுவனங்கள் மற்றும் 53 தனி நபர்களுக்கு அபராதம்..!
தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சி, மேலும் கேரளாவின் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து நேற்று முதல் சேவை தொடங்கப்பட்டு, ஜூன் 23 ஆம் தேதி வரை விமான சேவைகள் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று காலை விமான சேவை இயக்கப்பட்டது.
குறிப்பாக நீண்டகால அனுமதி வைத்திருப்போர் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின்னரே நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் விமான சேவைகள் பற்றிய விவரங்களுக்கு : Air India Express
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியதாக தம்பதி மீது குற்றசாட்டு..!