சக ஊழியர் மீது வெந்நீரை ஊற்றிய ஊழியருக்கு சிறை

சக ஊழியர் மீது வெந்நீரை ஊற்றிய ஊழியருக்கு சிறை
Pixabay

தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர் மீது வெந்நீரை ஊற்றிய ஊழியருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அங் மோ கியோ அவன்யூ 3 இல் உள்ள Malaysia Boleh Food Court உணவகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

பாத்திரங்களை கழுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் 67 வயதான தாங் ஜாங் கியாட் என்ற ஊழியர், சக ஊழியரான 73 வயதுமிக்க சான் ஆ லான் என்பவர் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார்.

இதனை அடுத்து, அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) சேர்க்கப்பட்டார். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அவரது உடலில் 4.5 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அதாவது அவரது முகம், உச்சந்தலை, மார்பு மற்றும் வலது கையின் கீழ் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு மருத்துவக் கட்டணமாக S$1,000 தொகையை சான் செலுத்தியுள்ளார், ஆகவே இழப்பீடாக அந்த தொகையை வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

துவாஸ் தொழிற்பேட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து