சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத மொத்தம் 7,186 சிகரெட்டு அட்டைப்பெட்டிகள், ரொக்கத் தொகை S$14,898.65 மற்றும் மூன்று வாகனங்களை சிங்கப்பூர் சுங்கத்துறை கைப்பற்றியது.
கடந்த ஜனவரி 28, 2022 அன்று சிங்கப்பூர் சுங்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் அவைகள் சிக்கின.
இதில் 30 முதல் 52 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை பிப்ரவரி 2 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 62க்கு அருகில், ஜனவரி 28 அன்று மாலையில் சோதனை நடவடிக்கையை சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் வரி செலுத்தப்படாத சிகரெட்டு அட்டைப்பெட்டிகளை கொண்ட மூன்று வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளாடையிலுமா?…விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள் – எப்டிலாம் யோசிக்கிறாங்க!