தன் மனைவியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு கணவர் – குற்றம் நிரூபணமானால் சிங்கப்பூரில் மரண தண்டனை உண்டு

indian-origin-singapore-jailed

கட்டோங்கில் உள்ள Holiday Inn Express என்ற ஹோட்டலில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரின் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தன் மனைவியைக் கொன்றதாக இலங்கையை சேர்ந்த அந்த ஆடவர் மீது இன்று (செப். 11) குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கூரையை சுத்தம் செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்.. “சொல்லும் வேலை ஒன்னு.. செய்யும் வேலை ஒன்னு”

30 வயதுமிக்க ஈஷான் தாரக கூட்டகே (Eshan Tharaka Koottage) தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் 88 ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அமைந்துள்ள Holiday Inn Express Katong ஹோட்டலில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10.45 மணி முதல் மாலை 4.42 மணி வரை நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீண்டும் செப்டம்பர் 18ம் தேதி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என சொல்லப்பட்டுள்ளது.

32 வயதுடைய அந்த பெண், ஹோட்டல் அறையில் வெட்டுக் காயத்துடன் அசையாமல் கிடந்தார் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி ஒன்று ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனையை விதிக்கப்படலாம்.

இந்திய ஊழியர்களே இந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல விசா தேவையில்லை – புதிய விதிமுறை