ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி வழிபாடு!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று பௌர்ணமியையொட்டி, பால்குடம் வழிபாடு நடைபெறவுள்ளது. பால்குடம் நிகழ்வானது அன்றைய தினம் இரவு 08.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பிரம்மோத்சவம்!

முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். மேலும், smt.org.sg என்ற கோயில் இணையதளப் பக்கத்திலும் வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே, பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி வர முடியும்.

Pasir Ris -ல் நடத்தப்பட்ட ரமலான் கண்காட்சி இடைநிறுத்தம் – SFA எச்சரிக்கை

கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிபாட்டைப் பார்வையிடலாம். இம்மாற்றங்கள் குறித்து, உங்களின் ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம், இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.