ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயிலில் மார்ச் 23- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று முதல் ஏப்ரல் 2- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஸ்ரீ சத சண்டி மஹா யாகம் (Sri Satha Chandi Maha Yaagam) நடைபெறவுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இதில் மார்ச் 23- ஆம் தேதி முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை தினமும் இரவு 07.00 மணிக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜை நடைபெறும். இந்த பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். பூஜையில் பங்கேற்க 21 வெள்ளி கட்டணமாக செலுத்த வேண்டும். பூஜைக்குரிய அனைத்து பொருட்களும் ஆலயத்தில் வழங்கப்படும்.

அதேபோல், ஏப்ரல் 2- ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தனக்குட அபிஷேகம் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், பங்கேற்புக் கட்டணமாக 5 வெள்ளியை செலுத்த வேண்டும். சந்தனக்குடம் கோயிலில் தயார் செய்து வழங்கப்படும்.

ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று காலை 08.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெறும். இதில், கலந்துக் கொள்ள விரும்பும் பக்தர்கள் கட்டணமாக 21 வெள்ளி செலுத்த வேண்டும். இதற்கான கட்டணங்களை கோயில் அலுவலகத்தில் செலுத்தி, அதற்கான டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பிரபல ஐ.டி. நிறுவனம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கை… ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://heb.org.sg/events/smt_020423/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.