சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில், சிங்கப்பூரில் உள்ள 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை (Sri Periyachi Amman Poojai) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.05 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் ஸ்ரீ மாரியம்மன் கரக ஊர்வலமும், இரவு 07.15 மணிக்கு மாலை பூஜையும், இரவு 08.00 மணிக்கு பாளை சுக்குமாத்தடி ஊர்வலமும், இரவு 08.30 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்கினி கப்பறையும், இரவு 09.00 மணிக்கு சிறப்பு பெரியாச்சி பூஜையும், இரவு 09.15 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.
கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளைப் பார்வையிடலாம். காலை 11.00 மணிக்கு, பக்தர்கள் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொள்ளலாம். இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக ரூபாய் 6.95 லட்சம் பண மோசடி!
பூஜைகளை வீட்டில் இருந்த படியே காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகளின் நேரலையை மாலை 06.05 மணி முதல் https://heb.org.sg/ என்ற இணையதளப் பக்கத்தில் அணுகலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.