ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு நடைபெறும் என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள எண் 19 சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில், அக்டோபர் 28- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை மிக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

நொவீனா ரயில் நிலையம் திடீர் மூடல் – ரயில் பயணிகளுக்கு ஆலோசனை

இந்த திருவிளக்கு பூஜையில் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு எல்லாச் செல்வங்களையும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அம்பாள் துணை நிற்பார். இந்த சிறப்புமிக்க திருவிளக்கு பூஜையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், 63458176 என்ற ஆலயத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு, ரூபாய் 21 வெள்ளியை கட்டணமாக செலுத்தி முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் திருட்டு: நான்கு இளையர்கள் கைது

அக்டோபர் 28- ஆம் தேதி அன்று மாலை 05.15 மணிக்கு சங்கல்பமும், மாலை 06.30 மணிக்கு விசேட சாயரட்சைப் பூஜையும், மாலை 06.50 மணிக்கு திருமூலர் நாயனார் குருபூஜையும், இரவு 07.30 மணிக்கு வசந்தமண்டப பூஜையும், இரவு 08.40 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.