ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் ‘மாசி மகம் பௌர்ணமி’ பூஜை- பக்தர்களுக்கு அழைப்பு!

சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பூஜை!
Google Image

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் ‘மாசி மகம் பௌர்ணமி’ பூஜை நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு சென்ற பெண்ணின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் ரிஷ் சாலையில் (Marsiling Rise) சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ‘மாசி மகம்’ பூஜைகள் நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, பிப்ரவரி 23- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு யாக பூஜை தொடங்கப்படும். காலை 09.00 மணிக்கு ஸ்ரீ விசாலாட்சி- விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 09.30 மணிக்கு பூர்ணாஹுதியும், காலை 09.45 மணிக்கு சங்காபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மஹா தீபாராதனையும், காலை 10.45 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை

‘மாசி மகம் பௌர்ணமி’ பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்து, பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.