ஆப்பிள் சாதனங்களை திருடிய ஆடவர் – எட்டு மாத சிறை விதித்து அதிரடி தீர்ப்பு

steal-apple-products jaield
Google Maps

ஆப்பிள் தயாரிப்புகள் சிலவற்றை திருடியதற்காக 36 வயது ஆடவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங் சி சியூ என்ற அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் குற்றம் நிரூபணமானது. தண்டனையின் போது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

லாரியையும் விட்டுவைக்கலயா.. அலேக்கா திருடி சென்ற 3 பேர் – மடக்கிய போலீஸ்

இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் ஏப்ரல் 17 வரை மூன்று ஆப்பிள் கடைகளில் இந்த தொடர் திருட்டு நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து, மே மாதம் புகார் கிடைத்ததாகவும் போலீசார் செய்திக் குறிப்பில் கூறினர்.

அந்த கடைகளில் இருந்து சுமார் S$17,660 மதிப்புள்ள பல ஆப்பிள் தயாரிப்புகளை இங் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

திருடப்பட்ட கடைகள் எங்கு அமைந்துள்ளது மற்றும் திருடப்பட்ட பொருட்கள் பற்றிய விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

மேலும் அந்த ஆடவர் கடந்த மார்ச் 17 அன்று, சாங்கி விமான நிலைய டெர்மினல் 3ல் அமைந்துள்ள ஷில்லா டூட்டி ஃப்ரீ கடையில் இருந்து S$593 மதிப்புள்ள வாசனை திரவியங்களையும் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

தாயுடன் இறந்து கிடந்த மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தை – ஒரு மாதத்தில் 2வது சம்பவம்