சிங்கப்பூரில் வாகனம் திருடப்பட்டதாக 3 நாட்களில் 3 புகார்.. சந்தேக நபர்கள் இருவர் கைது

stolen vehicles Woodlands Yishun -

சிங்கப்பூரில் மோட்டார் வாகனம் திருடப்பட்ட மூன்று வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 17 மற்றும் 20 வயதுடைய இருவர் ஜனவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

காவல்துறை செய்தி வெளியீட்டின் படி, உட்லேண்ட்ஸ் மற்றும் யிஷூனில் ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை வாகனங்கள் திருடப்பட்டதன் தொடர்பில் மூன்று புகார்கள் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

காட்டுப்பன்றிகளுக்கு உணவளித்த 4 பேருக்கு தலா S$2,500 அபராதம் – 19 பேர் மீது குற்றச்சாட்டு

விசாரணைகள் மூலமாகவும், காவல் கேமராக்களின் உதவியுடனும், உட்லேண்ட்ஸ் காவல் பிரிவின் அதிகாரிகள் இருவரின் அடையாளங்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்தனர்.

மேலும், திருடப்பட்ட மூன்று வாகனங்களும் மீட்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இருவர் மீதும் பொது நோக்கத்துடன் மோட்டார் வாகனம் திருடியதாக இன்று (ஜனவரி 14) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம்.

நச்சு கலந்த உணவு காரணமாக 26 பேர் பாதிப்பு – உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…