பெண்ணிற்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மாணவருக்கு சிறை தண்டனை!

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்
Photo: Freepil

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி அன்று லீ யான் ரூ (வயது 25) என்றவரும் அப்பெண்ணும் படிப்பதற்காக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்தப் போது இப்பாலியல் குற்றம் நடைப்பெற்றது.

லீ, அப்பெண்ணிடம் தகாத முறையிலும், மிகவும் வன்மமாகவும் நடந்தக் கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிரெய்லர் வாகனம், கார் விபத்து: சுமார் 5 கிமீ வரை போக்குவரத்து நெரிசல்

இப்பாலியல் சம்பவம் நடப்பதற்கு, ஒரு மாதத்திற்கு முன்பாக இருவரும் சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராம் மூலம் பழகி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி ஷனாஸ் அவர்கள் விசாரணை நடத்தி தண்டனையை கொடுப்பதற்கு முன், இச்சம்பவத்தில் அதிகமாகவும், மிக வன்முறையாகவும் பாலியல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அப்பெண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர் குற்றம் செய்த லீ யான்க்கு 3 பிரம்படிகளும், 10 மாதம் சிறை தண்டனையையும் அவர் விதித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அப்பெண்ணின் அடையாளத்தையோ, விபரத்தையோ வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டார் மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி ஷனாஸ்.

சிங்கப்பூரில் மிகப்பெரிய பேருந்து மற்றும் ரயில் பராமரிப்பு மையம் விரைவில்…