16 வயது சிறுவன் உட்பட 87 போதைப்பொருள் சந்தேக குற்றவாளிகள் கைது!

suspected drug offenders nabbed
Suspected drug offenders nabbed (PHOTO: WALB)

சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், 16 வயது சிறுவன் உட்பட 87 போதைப்பொருள் சந்தேக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை, தீவு முழுவதும் CNB அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையில் 87 சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றவாளிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 நாளில் மூன்று ஊழியர்கள் வேலையிடத்தில் உயிரிழப்பு – கட்டுமான பாதுகாப்பு குறித்த மறுஆய்வு

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 23) புக்கிட் மேராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ​​

அப்போது, 19 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளம் தாய்மார்கள், தங்கள் ஐந்து வயது மற்றும் நான்கு மாத குழந்தைகளுக்கு முன்னால் போதைப்பொருளைப் பயன்படுத்திக்கொண்டு இருந்ததாக CNB குறிப்பிட்டுள்ளது.

பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

(PHOTO: CNB)

இந்த சோதனை நடவடிக்கையில், 16 வயது சிங்கப்பூர் சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக CNB இன்று செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், ஹெராயின், கஞ்சா உட்பட கிட்டத்தட்ட S$400,000 மதிப்புள்ள போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தற்போது சந்தேக நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…