வெளிநாட்டு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து, பணத்தையும் பெற்றுக்கொண்டு கடமை தவறிய அதிகாரிக்கு சிறை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

வெளிநாட்டு பெண்ணுக்காக கடமை தவறிய குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சேவை செய்யும் அந்த பெண்ணிடம் இருந்து உல்லாசம் அனுபவித்து, பணத்தை பெற்று கொண்ட 49 வயதான தியோ ஹூவீ பெங்க்கு கடந்த திங்களன்று இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இடி, மின்னலுடன் கனமழை.. குடை பிடித்து 21வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர் – கவலை கொள்ளும் நெட்டிசன்கள்

சீன பெண்ணான லியாங் கிங்லானிடம் இருந்து தியோ பணம் பெற்றதாகவும், அதற்காக $2,600-க்கு மேல் அபராதம் செலுத்தவும் தியோவுக்கு உத்தரவிடப்பட்டது.

தியோ, 2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 முதல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மூத்த ICA அதிகாரியாக இருந்த அவர் இந்த குற்றங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செய்ததாக மாவட்ட நீதிபதி விக்டர் இயோ குறிப்பிட்டார்.

தியோ தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக வழக்கறிஞர் நாராயணன் விஜய குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தியோ $50,000 ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடமை மறந்து ஊழலில் ஈடுபடும் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கெப்பல் பே மெரினாவில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் சடலம்