தய் செங் அருகே போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் 58 வயது ஆடவர் ஒருவர் இறந்தார்.
இந்த சம்பவம் ஹௌகாங் அவென்யூ 3 மற்றும் கிம் சுவான் சாலை சந்திப்பில் நேற்று ஜூன் 21 அன்று நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மாலை 5:30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், பின்னர் அவர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய மற்றொருவரான 31 வயதான போலீஸ் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சுயநினைவுடன் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்