வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதற்காக சிங்கப்பூர் அரசு விரிவான அணுகுமுறையை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு, நம்பிக்கை மற்றும் ஆதரவு வழங்கும் குழுக்கள் சுமார் 170-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரத்தைக் கவனித்துக்கொள்வது:
- வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் மருத்துவ வசதிகள்
- பொழுதுபோக்கு நிலையங்களில் மருத்துவச் சாவடிகள், மற்ற ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு சேவை வழங்க நடமாடும் மருத்துவக் குழுக்கள்
- பாதிக்கப்பட்ட பெரும்பாலான தங்கும் விடுதிகளிலேயே சமூகப் பராமரிப்பு வசதிகள்
- குணமடைந்த ஊழியர்களுக்கு சிறப்பாக ஒதுக்கப்பட்ட ப்ளாக்குகள்(BLOCK)
இதயம் படிங்க: அத்தியாவசிய பயணத்தை மீண்டும் தொடங்க 4 நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படுகிறது..!
உணவு மற்றும் வசதிகள்:
- உணவுப்பராமரிப்புப் பொட்டலங்கள், இணையத் தொடர்புகொண்ட SIM அட்டைகள், Wifi சேவைகள் மற்றும் இலவசத் திரைப்படங்கள்.
சம்பளம் மற்றும் பணம் அனுப்பும் சேவை:
- முதலாளிகள் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் சம்பளம் வழங்குவதை மனிதவள அமைச்சு(MOM) உறுதிசெய்து வருகிறது.
- வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சேவைகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: go.gov.sg/MOM-1May
இதயம் படிங்க: சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக பொறியாளரின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது..!