சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது, அதில் தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமான பயணிகளை வழக்கம் போல சோதனை செய்து கொண்டிருந்தனர்.
மகளை கொடூரமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்திய தந்தைக்கு சிறை, 12 பிரம்படி – சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி
அப்போது, புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 29 வயதான பாலாஜி என்ற ஊழியர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தீவீரமாக விசாரித்தனர்.
அதனை அடுத்து, அவர் மீது இலுப்பூர் பகுதி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் தேடப்பட்டு வருபவர் என்ற அறிவிப்பு இருப்பதும் தெரியவந்தது.
பின்னர், அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து இலுப்பூர் போலீஸ் விமான நிலையத்திற்கு வந்து பாலாஜியை அழைத்து சென்றனர்.
சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் – எச்சரிக்கை செய்யும் வானிலை சேவை நிலையம்