சிங்கப்பூரில் TraceTogether சாதனத்தை பயனற்றதாக மாற்ற அல்லது ஏதேனும் இடையூறு செய்வதற்காக அதனை சேதப்படுத்துவது குற்றம் ஆகும்.
வழக்கறிஞர் ஜோசுவா டோங் (Joshua Tong) The New Paper-யிடம் கூறுகையில்: அந்த சாதனங்களில் சேதம் அல்லது மாற்றங்கள் இருந்தால், அந்த குற்றத்திற்கு பொறுப்பேற்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : இதையும் படிங்க : லிப்ட் கதவுகளைத் திறந்து வைக்காததால் பெண்ணைத் தாக்கிய ஆடவரும் அபராதம்..!
இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் / அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.
பொது சுகாதார சேவைக்கு இடையூறு விளைவிக்கும் குற்றச்சாட்டுக்கும் சாதனங்கள் சேதப்படுத்தியவர் மீது குற்றம் சாட்டப்படலாம்.
இதற்கு கடுமையான தண்டனையாக, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் / அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
TraceTogether சாதனம் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சொத்து என்பதால், அதனை அணுகுவது, தரவை மாற்றவோ அல்லது தவிர்க்கவோ சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம் ஆகும்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த புதிய இடங்கள்..!