தஞ்சோங் பகாரில் கட்டிட விபத்து….. மீட்புப் பணிகள் தீவிரம்!

தஞ்சோங் பகாரில் கட்டிட விபத்து..... மீட்புப் பணிகள் தீவிரம்!
Photo: SCDF

 

சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் பகார் (Tanjong Pagar) பகுதியில் 1 பெர்னாம் தெருவில் (1 Bernam Street) உள்ள பணியிடம் ஒன்றில் கட்டிடத்தின் ஒரு பகுதி யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (ஜூன் 15) பிற்பகல் 02.00 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸில் சிங்கப்பூரர் சுட்டுக் கொலை…..காவல்துறை தீவிர விசாரணை!

இதையடுத்து, மரினா பே தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர்.

அத்துடன், கட்டிட இடிபாடுகளை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், தொழிலாளி ஒருவரைக் காணவில்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்- வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!

அனைத்து உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.