டாக்ஸி ஓட்டுநரின் கைபேசியை பறித்ததாக ஆடவர் கைது

taxi driver phone snatching theft
(Images: Unsplash and Google Maps)

டாக்ஸி ஓட்டுநர் ஒருவரின் கைபேசியை பறித்ததாக சந்தேகத்தின்பேரில் 43 வயதான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கடந்த ஜூலை19 ஆம் தேதி, மாலை 5:30 மணியளவில் டாக்ஸி ஓட்டுநரிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

குளிக்கும்போது வீடியோ எடுத்த பல்கலைக்கழக மாணவருக்கு சிறைத் தண்டனை!

ஜுராங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 52இல், முன்பின் தெரியாத ஒருவரால் கைபேசி பறிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டது.

விசாரணைகள் மூலமாகவும், காவல்துறை கேமராக்களின் உதவியுடனும், ஜுராங் காவல் பிரிவின் அதிகாரிகள், 43 வயதான அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

பின்னர் மறுநாள் ஜூலை 20, அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

தண்டனைச் சட்டத்தின் 356வது பிரிவின்கீழ், அவர் மீது இன்று (ஜூலை 22) நீதிமன்றத்தில் குற்றசம் சாட்டப்படும்.

சிங்கப்பூரில் உள்ள இந்த இரண்டு சந்தைகளை மூட உத்தரவு.!