பெடோக் சவுத்தில், நேற்று (ஜூலை 26) இரவு கூடைப்பந்து உலோக வளைய அமைப்பு விழுந்ததில் இளையர் ஒருவர் உயிரிழந்தார்.
பிளாக் 18 பெடோக் சவுத் சாலைக்கு அருகிலுள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்தில் அது விழுந்தது தொடர்பாக நேற்று இரவு 8.43 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டினருக்கு நற்செய்தி: செப்டம்பரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்..!
17 வயதான அந்த இளையர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர், பலத்த காயங்கள் காரணமாக அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இன்று காலை பேஸ்புக் பதிவில், ஈஸ்ட் கோஸ்ட் டவுன் கவுன்சில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
இயற்கைக்கு மாறான இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான திட்டம் – பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்