சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை மூடவுள்ள நிறுவனம் – 300 ஊழியர்களுக்கு வேலை இல்லை

சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை Tetra Pak to cut 300 employees
Tetra Pak website

சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை Tetra Pak நிறுவனம் மூடவுள்ளதால் சுமார் 300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் அடுத்த 12 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று Tetra Pak நேற்று முன்தினம் (பிப் 27) செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

“79 ஊழியர்களுக்கு வேலை இல்லை” – பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் நிறுவனம்

மற்ற வட்டார நாடுகளில் உள்ள அதன் பிற தொழிற்சாலைகளுடன் சிங்கப்பூர் உற்பத்தியை அது ஒருங்கிணைக்க உள்ளதால் இந்த பணிநீக்கம் நடைபெறவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் செய்யும் நிறுவனமான அது, ஊழியர்களுக்கு இந்த முடிவு குறித்து அன்றைய தினமே தெரிவிக்கப்பட்டதாக சொன்னது.

புதிய வாய்ப்புகள் அல்லது வேறு வேலைகளை தேடி கொள்ள ஊழியர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

துறவி கொடுத்த லாட்டரிக்கான அதிஷ்ட எண்.. நம்பி வாங்கி கடனாளி ஆனதால் துறவியை தாக்கிய ஆடவர்