‘தைப்பூச திருவிழா 2024’- ஸ்ரீ தெண்டாயுபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

'தைப்பூச திருவிழா 2024'- ஸ்ரீ தெண்டாயுபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Photo: Singapore PM Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள டேங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயில் (Sri Thendayuthapani Temple). இந்த கோயிலில் ‘தைப்பூசத் திருவிழா 2024’ (Thaipusam Festival 2024) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

டிப்பர் லாரி மற்றும் லாரி மோதி கடும் விபத்து.. இருக்கையில் சிக்கிய லாரி ஓட்டுநர்

சிங்கப்பூரில் இன்று (ஜன.25) காலை 08.30 மணிவாக்கில் மீண்டும் மழை தொடங்கிய நிலையிலும் கூட, பக்தர்கள் பால்குடம், காவடிகள் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் முருகனை சுவாமி தரிசனம் செய்து தங்களது நேரத்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் அமைந்துள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டுள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்தது பக்தர்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா.. பயணியிடம் சிக்கிய ரூ.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்

பக்தர்களின் வசதிக்காக, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் நிர்வாகமும், இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதேபோல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதனிடையே, அலகுக்காவடிகளுடன் பக்தர்கள் ஊர்வலமாகத் தொடர்ந்து கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.