சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் ஈஸ்ட் தெருவில் (Jurong East Street) அமைந்துள்ளது ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில் (Sri Arulmigu Murugan Temple). தைப்பூசத் திருவிழாவையொட்டி, இந்த கோயிலில் அமைந்துள்ள முருகனுக்கு இளநீர், பன்னீர், பால், மஞ்சள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழுதடைந்த மின் சாதனங்கள், உடமைகளை இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் – செராங்கூன் உள்ளிட்ட 10 இடங்களில்..
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூசத்தையொட்டி, ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
‘தைப்பூச திருவிழா 2024’- ஸ்ரீ தெண்டாயுபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
தைப்பூசத் திருவிழா என்பதால், நேற்று (ஜன.24) இரவு முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.