COVID-19 தொற்றால் சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

The Ministry of Health (MOH) also confirmed one more death as a result of complications from COVID-19
The Ministry of Health (MOH) also confirmed one more death as a result of complications from COVID-19

COVID-19 தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போதுவரை 17 ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 12ஆம் தேதி திறக்கப்படும் சேவைகள் SafeEntry செயலியைப் பயன்படுத்த வேண்டும்..!

இதில் சிங்கப்பூரில் சம்பவம் 1323 என அடையாளம் காணப்பட்ட 76 வயதான சிங்கப்பூர் ஆடவர், மே 1 அன்று உயிரிழந்தார்.

அவருக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே போல் நேற்றைய நிலவரப்படி, MOH மற்றொரு மரணத்தையும் அறிவித்துள்ளது, அதில் 47 வயதான பங்களாதேஷ் ஆடவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் 17410, என அடையாளம் காணப்படும் இவரின் மரணத்திற்குப் பிறகு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க : எச்சரிக்கை பதிவு: சிங்கப்பூரில் தொலைபேசியின் மூலம் பண மோசடி..!