திருப்பதியில் விபத்தில் இறந்த இருவரின் உடல் சிங்கப்பூர் வந்தது.. இறுதிச்சடங்கு எங்கு?

thirupati accident spore 2 people funeral
One Stop Indian Casket

சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற ஓட்டுநர் உட்பட 3 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் இருவர் உடல் தற்போது சிங்கப்பூர் வந்தடைந்துள்ளது.

அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிளாக் 633 – ஹவ்காங் அவென்யூ 8 இல் இன்று மாலை நடைபெறும்.

நாளை மார்ச்.16 ஆம் தேதி அவர்களின் உடல்கள் மாண்டாய் தகன இடத்துக்கு எடுத்து செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு மூன்று பேர் விமானம் மூலம் மார்ச் 12- ஆம் தேதி அன்று காலை வந்தனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக, திருப்பதிக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அருகே தர்மபுரம் கிராஸில் கார் சென்றுக் கொண்டிருந்த போது, எண்ணெய் நிரப்பிய டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முழு விவரம் மற்றும் வீடியோ:

சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற 3 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!