இந்த இக்கட்டான காலங்களில் ஒற்றுமையும் விடாமுயற்சியும் நமது சிங்கப்பூரின் உணர்வை வரையறுக்கிறது என்று பிரதமர் லீ சியென் லூங் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பல சிங்கப்பூரர்கள் புதிய வேலைகளில் தங்களை இணைத்துள்ளனர், தங்கள் தொழில்களை மாற்றியுள்ளனர், மேலும் இந்த புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர் என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 347 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 5 பேர் பாதிப்பு..!
இந்த தனிப்பட்ட மாற்றங்களுக்கு இடையில், அவர்கள் தங்களின் ஒத்துணர்வை வெளிப்படுத்தியுள்ளனர், மற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளனர். மேலும் இந்த இக்கட்டான காலங்களில் ஒற்றுமையும் விடாமுயற்சியும் நமது சிங்கப்பூர் உணர்வை வரையறுக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
COVID-19 தொற்று இந்த தலைமுறையின் நெருக்கடி. நம்முடைய முன்னோடிகள் மீள்திறன் கொண்டு எவ்வாறு சவால்களைக் கடந்து வந்தார்களோ, அதே போல நாமும் நம் முன்னோர்களின் நெகிழ்ச்சி உணர்வைத் தொடர வேண்டும் என்றும் திரு. லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அரசாங்கம் ஆதரவு திட்டங்கள் மற்றும் தொகுப்புகளை செயல்படுத்தியுள்ளது, மேலும் யாரும் பின்வாங்காமல் இருக்க எல்லா முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
Our people’s spirit of fortitude in the face of the COVID-19 crises is captured movingly in this series of @govsingapore videos. The government has implemented support schemes & packages, & will make every effort to ensure no one gets left behind. – LHLhttps://t.co/oHvSQ8mFt5
— leehsienloong (@leehsienloong) June 13, 2020
மேலும் ஒரு நாள் நாம் திரும்பிப் பார்ப்போம், நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம், ஒரு சிங்கப்பூராக நாம் எவ்வளவு வலிமையாகிவிட்டோம் என்பதை காண்போம் என்று திரு. லீ குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!