ஆறுமுகம் சாலையில் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

Three people arrested fight
Facebook/Beh Chia Lor - Singapore Road

பாயா லெபார் சாலையை அடுத்த ஆறுமுகம் சாலையில் நேற்று (ஆக. 10) சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அன்று மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக CNA கேள்விகளுக்கு பதிலளித்த போலீசார் தெரிவித்தனர்.

கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரை விட்டு வெளியேற்றம் – வேறு எங்கு சென்றார்?

சிவப்பு நிற டாப் அணிந்த பெண், மற்றொரு பெண்ணின் மீது நாற்காலியை வீசி அடிப்பதை வீடியோ வாயிலாக காண முடிந்தது.

சண்டை நீண்டுகொண்டே செல்ல, அங்கிருந்த நபர்கள் சிலர் அதில் தலையிட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதில் 69 வயதுடைய ஆண் ஒருவரும், 65 மற்றும் 71 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இதில் 71 வயதான பெண் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு: தூண்-பேருந்து இடையே சிக்கி பலியான சோகம்