மசாஜ் நிலையங்களில் அந்த மாறி சேவை: பிடிபட்ட 3 பெண்கள் – உரிமம் இல்லாமல் செயல்பட்ட நிறுவனங்கள்

Three women arrested massage parlours
Police

சிங்கப்பூரில் உள்ள மசாஜ் நிலையங்களில் பாலியல் சேவைகளை வழங்கியதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவ.29 மற்றும் டிச.12 ஆகிய தேதிகளில் நடந்த சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

தந்தை இறந்தது கூட தெரியாமல் 5 நாள் சடலத்துடன் இருந்த புத்தி சுவாதீனம் இல்லா மகன்

அவர்களுக்கு வயது 27 முதல் 46 வயதுக்கு உட்பட்டு இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த அமலாக்க நடவடிக்கை ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 மற்றும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21 ஆகிய இடங்களில் உள்ள மசாஜ் நிலையங்களில் நடந்தது.

இந்த சோதனையில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இரண்டு மசாஜ் நிலையங்களும் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

Police

மேலும் நான்கு நிறுவன நடத்துனர்களும் மூன்று பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

ஊழியர்கள் பாலியல் சேவைகளை வழங்கிய குற்றம் நிரூபணமானால், $5,000 வரை அபராதம் விதிக்கப்படலம்.

மீண்டும் அதே குற்றம் செய்தால், $10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் முதலில் இருந்தா.. “முகக்கவசம்” இனி தேவை – வரும் டிச.19 முதல் தினசரி பாதிப்பு வெளியாகும்