சிங்கப்பூர் மத்திய விரைவுச்சாலையில் (CTE) இன்று (03-09-2021) காலை டிப்பர் லாரி ஒன்றில் தீடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாலான் புக்கிட் மேரா (Jalan Bukit Merah) வெளிவாயிலுக்கு பிறகு அந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) உடனடியாக அங்கு விரைந்து இரண்டு தண்ணீர் ஜெட்கள் மூலம் தீயை அணைத்தனர். காலை 9 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக SCDF குறிப்பிட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்: இறுதி செய்யும் பணியில் MOM
இந்த விபத்தில், யாருக்கும் எந்தவித காயமும் எற்படவில்லை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிப்பர் லாரியின் முன்பக்க கேபினில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக SCDF செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
லாரி பயணங்களால் ஆபத்துக்களை சந்திக்கும் ஊழியர்கள்: லாரிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?