பெரிய மரம் ஒன்று தோ பாயோ (Toa Payoh) குடியிருப்பு பகுதியில் விழுந்து வாகனங்களை சேதப்படுத்தியதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.
காலை சுமார் 7.30 மணி அளவில், லோரோங் 5, புளோக் 68 அருகே அந்த மரம் விழுந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலையில் விபத்து… மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர் கைது!
மேலும் அது கூறுகையில், பெரிய மரம் விழுந்ததில், கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் சேதமடைந்ததாக குறிப்பிட்டுள்ளது.
மரம் விழுந்ததற்கான காரணம் பற்றி உறுதியாக குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், பழைய மரம் என்றும், லேசாக மழை பெய்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
யாருக்கும் ஏதும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்தும் அது தெரிவிக்கவில்லை.
Source: Seithi MediaCorp
சிங்கப்பூர்-திருச்சி விமானத்தில் சோதனை.. கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்!