பெண்ணின் பானத்தில் உடல் பாதிப்பை ஏற்படுத்தும் சில மருந்துகளை கலந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடவர், பொது இடத்தில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் அதை அந்த பெண்ணிடம் அவர் காட்டியுள்ளார், ஆனால் பெண்ணுக்கு அது பிடிக்காததால் அதனை கண்டும் காணாமல் சென்றுள்ளார் அவர்.
இதனால் கோபமடைந்த கிம் டோங்ஹன் என்ற அந்த சுற்றுலாப் பயணி, உடல் உறுப்பு செயலிழப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்தை பெண் குடித்து வைத்து சென்ற பானத்தில் கலந்துவிட்டார்.
பின்னர் பானத்தை பருகிய அந்த பெண்ணுக்கு மயக்க உணர்வு ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அங்கு இருந்த பிளாஸ்டிக் கவரில் வெள்ளை தூள் இருப்பதையும் அவர் கவனித்தார். அதன் பின்னர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 33 வயதான தென் கொரியரான கிம்க்கு நேற்று (மார்ச் 12) நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.