உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழி செல்லும் காஸ்வேயில் விபத்து ஏற்பட்டது.
திங்கள்கிழமை (டிச.12) இரவு 10 மணியளவில் நடந்த இந்த விபத்து காரணமாக மூன்று வழித்தடங்களில் ஒன்று தடைப்பட்டது என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
“உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய உள்ள அனைத்து பயணிகளும் தாமதமாக செல்வதை எதிர்பார்த்து வர வேண்டும்” என ICA கூறியது.
மேலும், வாகன ஓட்டிகள் அது குறித்த புதிய தகவலுக்கு ICA பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுவதாக ICA கூறியது.
ஆனால் அதன் பின்னர் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு வெளியான புதுப்பிப்பில் அனைத்து பாதைகளும் சரிசெய்யப்பட்டு விட்டதாக ICA தெரிவித்தது.