கட்டுமான தளத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் – நலமுடன் இருப்பதாக கூறும் நிறுவனம்

construction workers in singapore
AFP/Roslan Rahman

கட்டுமான தளத்தின் ஏழாவது மாடியில் இருந்து ஊழியர் ஒருவர் கீழே விழுந்து அதிஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியர் விபத்தில் மரணம்: விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

இந்த சம்பவம் Gambas Wayல் உள்ள கட்டுமான தளத்தில் நடந்ததாக SoilBuild Construction Groupன் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 10.05 மணியளவில் காம்பாஸ் அவென்யூ அருகே உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ஊழியர் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் விரிவான விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

விடுமுறை நாளில் கடலில் குளித்து மகிழ்ச்சியாக இருக்க சென்ற அண்ணன்-தம்பி நீரில் மூழ்கி மரணம்