திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 42.69 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க பேஸ்ட் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 42.69 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க பேஸ்ட் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 683 கிராம தங்க பேஸ்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்

கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனத்தின் IX 614 என்ற எண் கொண்ட விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு (Trichy International Airport) வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் பயணி ஒருவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் 683 கிராம் தங்க பேஸ்ட்டைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. 42.69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பேஸ்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு சிறை

இந்த சம்பவம் காரணமாக, விமான நிலையத்தில் இருந்த சக பயணிகளிடையே சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.