கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்…. விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்.... விமான நிலையத்தில் சிக்கிய பயணி!
Photo: AIU Trichy

 

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஸ்போர்ட்டை பரிசீலிக்க வரிசையில் நின்ற வெளிநாட்டு ஆடவர்… சுருண்டு விழுந்து திடீர் மரணம்

அந்த வகையில், ஆகஸ்ட் 06- ஆம் தேதி இரவு சிங்கப்பூரில் இருந்து பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்கூட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சிங்கப்பூரில் வெளியாகும் ‘ஜெயிலர்’ திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!

அப்போது பயணி ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமார் 20.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 349 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.