திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவையையும். சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் திங்கள்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் நாள்தோறும் இரண்டு விமான சேவைகளையும் வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681, IX 689 என்ற விமானங்களையும் இயக்கி வருகிறது.
எல்லாருக்கும் இல்லை – குரங்கம்மைத் தடுப்பூசி பொதுமக்களுக்கு இல்லைனா யாருக்கு ?
இந்த வழித்தட விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் வரவுள்ளதால், சிங்கப்பூர் மற்றும் திருச்சி இடையேயான விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.