திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மார்ச் முதல் ஜூலை வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது.

பீஷானில் காக்கா கூட்டம் தாக்கியதில் 10 பேர் காயம்

தற்போது கோடைக்காலங்கள் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், சிங்கப்பூருக்கு பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்.18- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் மஹா சிவராத்திரி விழா!

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான மார்ச் முதல் ஜூலை மாதங்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.