திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜனவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனம். இந்த நிலையில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்கான இவ்வழித்தடத்திற்கான டிக்கெட் முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ள சிங்கப்பூரர்!

குறிப்பாக, ஜனவரி மாதத்தில் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால், இம்மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் திருச்சி, சிங்கப்பூர் விமான சேவைக்கான ஜனவரி மாதத்திற்கான அனைத்து பயண டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை டிக்கெட் முன்பதிவு, கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘OCBC’ வங்கி பெயரில் போலி குறுஞ்செய்திகள்- வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தல்!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற பெயரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற பெயரில் விமானமும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.