‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ‘Non- VTL’ விமான சேவையை வழங்கி வருகிறது. திருச்சியில் சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681, IX 689, IX 685 ஆகிய விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இவ்வழித்தடத்திற்கான ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெற்று வருகிறது.

உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்பூரர் உட்பட 12 பேர் கொண்ட குழு – “நன்றி” தெரிவித்த சிங்கப்பூர் தூதரகம்

அதன்படி, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு குறிப்பிட்ட நாட்களிலும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொட்டித் தீர்த்த தொடர் கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்

சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் சிங்கப்பூரின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.