‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை’- புதிய அட்டவணையை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை தொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express).

பிரபலமான அரிசி வகைகளுக்கு அதிரடி தள்ளுபடி – NTUC FairPrice

அதன்படி, வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான IX 682 என்ற விமானம் திருச்சியில் இருந்து அதிகாலை 01.45 மணிக்கு புறப்பட்டு, காலை 08.40 மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடையும். அதேபோல், IX 681 என்ற விமானம் சிங்கப்பூரில் இருந்து இரவு 09.45 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11.25 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த பயண அட்டவணை அடுத்தாண்டு மார்ச் மாதம் 24- ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page

தீபாவளியையொட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இனிப்பு, காரங்கள் அடங்கிய பையை வழங்கிய இந்து அறக்கட்டளை வாரியம்!

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.