சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Trichy flight gold seized

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த சிறப்பு விமானத்தில் இந்திய மதிப்பில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

அவற்றை கடத்தி வந்த குற்றத்திற்காக 4 பேர் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

சென்னை-சிங்கப்பூர் இடையே இருவழி பயணம் மேற்கொள்ள கூடுதல் விமானங்கள்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் (டிச.29) திருச்சிக்கு சிறப்பு விமானம் சென்றது.

அதில் சென்ற பயணிகளின் உடமைகளை வழக்கம் போல் விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், சுமார் 4 கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் மதிப்பு இந்திய ரூபாயில் 2 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…