திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை வரும் ஜனவரி 02- ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
மெரினா பே பகுதியில் புத்தாண்டு கொண்டாட செல்வோரின் கவனத்திற்கு..
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவிலேயே இது போன்ற விமான முனையம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதிநவீன வசதிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பசுமையான முனையம் மற்றும் நட்சத்திர அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது.
75,000 பரப்பளவைக் கொண்ட புதிய முனையத்தில் மொத்தம் 60 செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் 750 கார்கள், 250 டாக்ஸிகள் மற்றும் 10 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையம் சோலார் மின்சார வசதிகளுடனும், பசுமைக்கு உகந்த வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 3,000 பயணிகளைக் கையாள முடியும். ரன்வேயின் எந்தவொரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். பயணிகளின் உடைமைகளை எடுத்து வர சாய்வுத்தள கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முனையம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்கும் குளிர்சாதன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோயில் கோபுரம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
தனக்கே பல தேவைகள் இருந்தும்.. 250 நாய், பூனைகளை பராமரித்து காக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்
தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலைகளைப் பறைச்சாற்றும் வகையில், விமான நிலையத்திற்கு உள்ளே நடராஜர் சிலையும், உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் 60 அடி உயர தேரும் சுவர்களில் தத்ரூபமாக வரையப்பட்டு, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.