“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை”- ஜூன் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

திருச்சி, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் ஜூரோங்கில் உள்ள தொழிற்சாலையை மூடவுள்ள நிறுவனம் – 300 ஊழியர்களுக்கு வேலை இல்லை

தற்போது கோடைக்காலம் மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் வரவுள்ள நிலையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“79 ஊழியர்களுக்கு வேலை இல்லை” – பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் நிறுவனம்

இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான ஜூன் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.com/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.