சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக வேலை…புதுக்கோட்டை வந்த ஊழியர் மாயம் – தேடிவரும் போலீஸ்

Trichy flight gold seized

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஊழியர் ஒருவர் மாயமானது தொடர்பாக விமான நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.

மாயமான அவர், புதுக்கோட்டையை சேர்ந்த 64 வயதான நாராயணன் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

Breaking: ஜன. 7, 2022 முதல், VTL அல்லாத பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் சிங்கப்பூர்!

அவர் சிங்கப்பூரில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நாராயணன் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.

இண்டிகோ விமானத்தில் வந்த ஊழியர், வெளியே சென்றும் வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

மேலும், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனை அடுத்து உறவினர்கள் திருச்சி விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஊழியரை தேடி வருகின்றனர்.

கடத்தல் ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VTL சேவை மீண்டும் தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா…?