பேருந்து ஓட்டுநரை தாக்கிய 33 வயது டிரக் ஓட்டுநருக்கு சிறை

truck-driver-assault-jailed
Google Maps

சிங்கப்பூர்: 33 வயதான டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு நேற்று முன்தினம் பிப்ரவரி 1, அன்று தண்டனை வழங்கப்பட்டது.

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

அதாவது அவர் பேருந்து ஓட்டுநருடன் (38 வயது) வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை பலமுறை அறைந்து தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

அதனால் பேருந்து ஓட்டுநருக்கு முகம் மற்றும் தலையில் பல காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டுவிடும் என்ற நோக்கத்துன் அதனை தடுக்கும் முயற்சியில் பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்து முகப்பு விளக்கை ஒளிரச் செய்ததால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு முழு மருத்துவச் செலவையும் வழங்குமாறு டிரக் ஓட்டுனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி இரவு 9:56 மணிக்கு டெலோக் பிளாங்காவில் உள்ள ஷெல்டன் கல்லூரிக்கு முன்னால் நடந்தது.

பேருந்து, லாரியுடன் விபத்து.. சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்