​​24-38 வயதுக்குட்பட்ட 5 பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட யோகா பயிற்றுவிப்பாளர் மீது குற்றச்சாட்டு

Getty Images/iStockphoto

ஐந்து பெண்களைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக Trust Yogaவின் பயிற்றுவிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இன்று நவ. 29 அன்று காவல்துறை செய்தி வெளியீட்டின்படி; 32 வயதான அந்த ஆடவர் மீது பாலியல் சீண்டல் தொடர்பாக நாளை (நவ. 30) 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

மேற்பார்வையாளரின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தியதற்காக ஊழியருக்கு சிறை

கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு யோகா வகுப்புகளின் போது​, ​​24 முதல் 38 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்த பயிற்றுவிப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது குறிப்பிடப்பட்ட தண்டனைகள் கலவையுடன் வழங்கப்படலாம்.

ஜூலை 11, 2020 அன்று மாலை 4 மணி வகுப்பில் அந்தயோகா பயிற்றுவிப்பாளர் தன்னைத் துன்புறுத்தியதாக ஒரு பெண் ட்விட்டரில் தெரிவித்தபோது இந்தச் சம்பவம் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

கனரக வாகனத்தில் இருந்து பறந்த டயர் – கார் ஒன்றை தாக்கும் காணொளி!