துவாஸில் உள்ள கட்டுமான தளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் 31 வயது ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
சுவரின் வலுவூட்டும் கம்பியின் ஒரு பகுதியும் அதை ஒட்டிய தொங்குமேடையும் இடிந்து விழுந்து இந்த சம்பவம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
71A துவாஸ் நெக்ஸஸ் டிரைவில் இருந்து சுமார் 5.25 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்த சம்பவம் நடந்த அந்த இடம் துவாஸ் நீர் மீட்பு ஆலையின் தளம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் துவாஸ் நீர் மீட்பு ஆலை கட்டுமான தளத்தில் பணிபுரியும் ஊழியர் என்றும், அவரது இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டதாகவும் PUB கூறியுள்ளது.
விசாரணைகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.