சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) நோக்கி செல்லும் தெம்பனீஸ் விரைவுச்சாலையில் (TPE) இரண்டு கனரக வாகனம், லாரி மற்றும் கார் விபத்துக்குள்ளானது.
இதில் சிக்கிய இரண்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மெரினா ஈஸ்ட் பார்க் அருகே வாக்கிங் வந்த முதலை.. உலகின் மிகப்பெரிய முதலை இனம் இது
செவ்வாய்கிழமை (அக். 10) மதியம் நடந்த இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்றை ஸ்டாம்ப் வாசகர் பகிர்ந்துள்ளார்.
விரைவுச்சாலையில் இரண்டு டிரெய்லர் கனரக வாகனங்கள் நின்றுகொண்டிருப்பதையும், அதன் ஓரத்தில் ஒரு லாரியும் கிடப்பதையும் காணமுடிகிறது.
மதியம் 1.02 மணியளவில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
“28 வயதான கனரக வாகன ஓட்டுநர் மற்றும் 61 வயதான லாரி ஓட்டுநர் ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் கூறியது.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..